sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

தசரதரின் தீர்மானம்

/

தசரதரின் தீர்மானம்

தசரதரின் தீர்மானம்

தசரதரின் தீர்மானம்


ADDED : செப் 16, 2022 10:50 AM

Google News

ADDED : செப் 16, 2022 10:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயோத்தி மன்னரான தசரதர் பிள்ளைப்பேறு வேண்டி யாகம் நடத்தினார். அதன் பயனாக கிடைத்த பாயாசத்தை குடித்ததால், மகாராணிகளான கோசலைக்கு ராமனும், கைகேயியிக்கு பரதனும், சுமித்ரைக்கு லட்சுமணன், சத்ருக்னன் பிறந்தனர்.

ஒரு மகன் மட்டும் பெற்றால் அவன் கயா ேக்ஷத்திரத்தில் தன் காலத்திற்குப் பிறகு பிதுர் தர்ப்பணம் செய்வானோ மாட்டானோ என்ற சந்தேகம் தசரதருக்கு இருந்தது. கயாவில் பிதுர்க்கடன் செய்வது விசேஷம் என்பதால் ஒரு மகன் இல்லாவிட்டால் இன்னொரு மகனாவது தனக்குப் பிண்டம் இடுவான் என்று அவர் நினைத்தார். அதற்காகவே ஒன்றுக்கு நான்காக பிள்ளைகள் இருக்கட்டும் என தீர்மானித்தார்.

ராமாயண காலத்திற்கு முன்பே முன்னோருக்கு தர்ப்பணம் செய்வது அவசியம் என்பதும், அதை கயாவில் செய்வது சிறப்பு என்பதும் ஒரு மகன் செய்யாவிட்டாலும் இன்னொருவனாவது பிதுர்க்கடன் செய்ய வேண்டும் என்பதும் தெரிகிறது.

அந்திமச் சடங்கு செய்தவர் தசரதருக்கு அந்திமச் சடங்குகளை செய்தது நான்காவது மகனான சத்ருக்னனே. ராம, லட்சுமணர் காட்டிற்கு சென்றதாலும், கைகேயி பெற்ற வரத்தால் பரதனுக்கும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. வனவாசம் சென்ற ராமர் 14 ஆண்டுகளுக்குப் பின் அயோத்தி வந்த பின்னர் பட்டாபிேஷகம் நடந்தது. அதன் பின்னரே கயாவில் தசரதருக்கு தர்ப்பணம் கொடுத்தார்.

நேரில் வந்த முன்னோர்

கலியுகத்திற்கு முந்திய கிருத, திரேதா யுகங்களில் முன்னோர்கள் நேரில் காட்சியளித்து திதி, தர்ப்பணங்களை ஏற்றனர். அப்போது பூமியில் தர்மம் தழைத்து இருந்ததால் இந்நிலை இருந்தது. ராமன் வனவாசம் முடித்து அயோத்தி திரும்பியதும் தசரதர் நேரில் தோன்றி ஆசியளித்தார். துவாபர யுகம், கலியுகத்தில் கண்ணுக்கு தெரியாமல் ஆசியளிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us