ADDED : ஜூலை 17, 2021 10:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனிதனின் உருவ அமைப்பிற்கும், சிதம்பரம் நடராஜர் சன்னதிக்கும் (பொன்னம்பலம் என இதை அழைப்பர்) நிறைய ஒற்றுமை உண்டு.
பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து 600 ஓடுகள், மனிதன் ஒரு நாள் சுவாசத்தின் எண்ணிக்கையாகும். அங்கு அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள் மனிதனின் நரம்புகளைக் குறிக்கும். கோயிலில் உள்ள 9 துவாரங்கள் உடலிலுள்ள 9 துவாரங்களைக் குறிக்கிறது.
'சிவாயநம' என்னும் மந்திரத்தின் அடிப்படையில் ஐந்து படிகளும், 64 கலைகளுக்காக சாத்து மரங்களும், 96 தத்துவங்களை காட்டும் ஜன்னல்களும், 4 வேதம், 6 சாஸ்திரம், பஞ்ச(5) பூதங்களின் அடிப்படையில் துாண்களும் இங்கு உள்ளன.