sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

அனுமன் சொன்ன நற்செய்தி

/

அனுமன் சொன்ன நற்செய்தி

அனுமன் சொன்ன நற்செய்தி

அனுமன் சொன்ன நற்செய்தி


ADDED : ஜன 07, 2022 08:41 AM

Google News

ADDED : ஜன 07, 2022 08:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுக்ரீவனுடன் இருந்த ராமர், சீதையைத் தேடிச் சென்ற வானர வீரர்களின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

தென்திசையில் இருந்து அனுமன் விண்ணில் பறந்து வருவதைக் கண்ட சுக்ரீவன், 'ஆ... ஹனுமான்' என்று துள்ளிக் குதித்தான். ராமனும் அனுமனை உற்று கவனித்தார்.

'கண்டேன் சீதையை' என்று சொல்லி ராமனையும், சுக்ரீவனையும் வணங்கினார் அனுமன். இதைக் கேட்ட ராமருக்கு மனதில் உற்சாகம் பிறந்தது.

“பிரபோ... கற்புக்கரசியான சீதையை என் கண்களால் கண்டேன். அரக்கியர் சூழ அசோக வனத்தில் சோகமே உருவாக அவர் காட்சியளித்தார். தாங்கள் ராவணனுடன் போரிட்டு மீட்க வராவிட்டால் உயிரை விடுவேன் என சபதம் செய்துள்ளார். எனவே நாம் தாமதிக்காமல் இலங்கை சென்று தாயை மீட்க வேண்டும்” என்று சொல்லி சீதை கொடுத்து அனுப்பிய சூடாமணியைக் கொடுத்தார்.

அதைக் கண்டதும் சீதையை நேரில் கண்டது போல ராமர் மகிழ்ந்தார்.

அதைக் கையில் வாங்கிய போது திருமண நாளில் சீதையின் பூந்தளிர் போன்ற கையைத் தொட்ட ஞாபகம் அவருக்கு வந்தது. நல்ல செய்தி சொன்னதோடு அதை உறுதிப்படுத்தும் வகையில் சூடாமணியும் அளித்த அனுமனை அணைத்து மகிழ்ந்தார் ராமர்.






      Dinamalar
      Follow us