ADDED : ஜூன் 21, 2022 12:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தீபமேற்றி கடவுளை வணங்குவது ஹிந்துக்களின் வழிபாட்டு முறை. கடவுளுக்கு நேரடியாக செய்யும் வழிபாடு விளக்கேற்றுதல். இதனால் நமது மனதில் உள்ள இருள் அகலும். யார் ஒருவர் தீபமேற்றி வழிபட ஆரம்பிக்கிறாரோ, அவரது வினைகள் தீர ஆரம்பிக்கும். மகிழ்ச்சியான வாழ்வு அமையும். விளக்கின் ஒளிக்கு நேர்மறை சக்தியை உருவாக்கும் ஆற்றல் உண்டு. அகல் விளக்கின் ஒளியில் தெய்வத்தை காண்பது அழகுதானே!

