sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

/

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு


ADDED : ஜூலை 12, 2022 12:21 PM

Google News

ADDED : ஜூலை 12, 2022 12:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உறவினர்கள் இடையே பிரச்னை வருவது இயல்பு. இதனால் மகிழ்ச்சி கெடுவதுடன், ஒரு குலமே அழிந்துவிடும் என மஹாபாரதம் சொல்லியுள்ளது. மஹாபாரத போருக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும்போது, கவுரவர்களின் தந்தை திருதராஷ்டிரன் கவலை அடைந்தார். எனவே தம்பியும், அமைச்சருமான விதுரரிடம் ஆலோசனை கேட்டார். அதற்கு அவர் ஒரு கதை சொன்னார். இரு பறவைகள் பறந்து கொண்டிருக்கும் போது, வேடன் ஒருவன் வலை வீசினான். அதில் சிக்கினாலும் அவை இடைவிடாமல் பறந்தன. வேடன் அதுபோகும் திசையிலேயே ஓட ஆரம்பித்தான். இதைப்பார்த்து சிலர் சிரிக்க, மனம் தளராமல் ஓடிக்கொண்டே இருந்தான் வேடன். திடீரென பறவைகளுக்குள் சண்டை மூண்டதால் வெவ்வேறு திசைகளில் அவை பறக்க ஆரம்பித்தன. அந்நிலையில் வலையுடன் சேர்ந்து பறவைகள் கீழே விழுந்தன. இதைப்போலத்தான் உறவினர்களும். ஒருவரையொருவர் பகைத்துக்கொண்டால் அதன் விளைவு அழிவுதான். ஒற்றுமையாக வாழ்ந்தால் சிறப்பான வாழ்க்கை அமையும்.






      Dinamalar
      Follow us