sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

வெள்ளத்தை நிறுத்திய சிவன்

/

வெள்ளத்தை நிறுத்திய சிவன்

வெள்ளத்தை நிறுத்திய சிவன்

வெள்ளத்தை நிறுத்திய சிவன்


ADDED : ஜன 26, 2022 05:15 PM

Google News

ADDED : ஜன 26, 2022 05:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லுார் அருகிலுள்ள திருப்புடைமருதுாரில் நாறும்பூநாதர் கோயில் உள்ளது. தாமிரபரணி நதிக்கரையில் உள்ள இக்கோயிலில் சிவன் சுயம்புலிங்கமாக இருக்கிறார். முற்காலத்தில் இக்கோயில் மருத மரங்கள் நிறைந்த காட்டின் நடுவில் இருந்தது. இங்கு சிவனை தரிசனம் செய்ய கருவூர்சித்தர் வந்த போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அவரால் ஆற்றைக் கடந்து கோயிலுக்கு செல்ல முடியவில்லை. கரையில் நின்றபடியே சிவனிடம் வேண்டினார். அப்போது மருத மலர்களின் மணம் வீசியது. அதை உணர்ந்த அவர், 'நறுமணமுடைய சிவனே!' என்ற பொருளில், 'நாறும்பூ நாதா! நான் அங்கே வர வேண்டும்' என்று பாடினார். அவரது வேண்டுதலை ஏற்ற சிவன் வெள்ளத்தை நிறுத்தி கோயிலுக்குள் வர அருள்புரிந்தார். கருவூராரால் நறுமணம் மிக்கவர் என்று பாடப்பட்டதால் இவர், 'நாறும்பூ நாதர்' எனப் பெயர் பெற்றார். இவருக்கு சந்தன தைலத்தால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. வெள்ளத்தால் பொருளை இழந்தவர்கள் இவரை வழிபட்டால் நன்மை உண்டாகும்.






      Dinamalar
      Follow us