sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

தினம் தினம் மணக்கோலம்!

/

தினம் தினம் மணக்கோலம்!

தினம் தினம் மணக்கோலம்!

தினம் தினம் மணக்கோலம்!


ADDED : மே 11, 2017 01:48 PM

Google News

ADDED : மே 11, 2017 01:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை - மாமல்லபுரம் சாலையில் கோவளத்தை அடுத்து உள்ளது திருவிடந்தை. காலவ மகரிஷி தன் மகள்கள் 360 பேரையும் மணம் முடிக்க பெருமாளே வர வேண்டும் என தவமிருந்தார். அதை ஏற்ற பெருமாள், யாத்திரை செல்பவர் போல் வந்து, பெண்கள் அனைவரையும் ஒரே உருவமாக்கி, தன் இடதுபாகத்தில் ஏற்றார். வராக மூர்த்தியாக பெருமாள் இங்கு சேவை சாதிக்கிறார்.

திருமகளாகிய அப்பெண்ணை தன் இடதுபாகத்தில் வைத்த படியால் இத்தலம் 'திருவிடவெந்தை' எனப்பட்டது. தற்போது'திருவிடந்தை' என்றாகி விட்டது. நித்ய கல்யாண கோலத்தில் காட்சி தரும் பெருமாள், ஆண்டின் 360 நாட்கள் ஒவ்வொரு பெண்ணாக திருமணம் செய்வதாக ஐதீகம். மீதி ஐந்து நாள் பிற சடங்குகளுக்காக ஒதுக்கி கொள்கிறார்.

பெருமாளின் ஒரு திருவடி பூமியிலும், மற்றொரு திருவடி ஆதிசேஷன் மீதுமாக உள்ளது.

அவரது மடியில் அகிலவல்லித் தாயார் வீற்றிருக்கிறார்.






      Dinamalar
      Follow us