sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

பெருமாளுக்கு உப்பில்லா பண்டம்

/

பெருமாளுக்கு உப்பில்லா பண்டம்

பெருமாளுக்கு உப்பில்லா பண்டம்

பெருமாளுக்கு உப்பில்லா பண்டம்


ADDED : செப் 08, 2017 09:24 AM

Google News

ADDED : செப் 08, 2017 09:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பர். ஆனால் கும்பகோணம் அருகிலுள்ள உப்பிலியப்பன் கோயிலில் பெருமாளுக்கு உப்பில்லாத பண்டம் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. லட்சுமிதேவி பூலோகத்தில் மானிட ஜென்மம் எடுத்திருந்தாள். அவளுக்கு வயது குறைவாக இருந்த நேரத்தில், பெருமாள் அப்பெண்ணை மணக்க ஆசைப்பட்டார். அவளது தந்தை, “இந்தப் பெண்ணுக்கு சரியாக உப்பு போட்டுக்கூட சமைக்கத் தெரியாது. அதற்குள் எப்படி திருமணம் செய்து கொடுப்பது?” என்றாராம்.

“உப்பில்லாத பண்டமாக இருந்தாலும் பரவாயில்லை. சாப்பிட்டுக் கொள்கிறேன்'' என பெருமாள் சொல்லி விட்டார். பின் இருவருக்கும் திருமணம் நடந்தது. இதனால் சுவாமிக்கு உப்பில்லாத பண்டம் படைக்கும் வழக்கம் ஏற்பட்டது. பிரசாத ஸ்டாலிலும் உப்பில்லாத பண்டமே விற்கப்படுகிறது. உப்பு போட்ட உணவை கோயிலுக்குள் கொண்டு செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை.






      Dinamalar
      Follow us