sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கிள்ளி எறிந்து விடு!

/

கிள்ளி எறிந்து விடு!

கிள்ளி எறிந்து விடு!

கிள்ளி எறிந்து விடு!


ADDED : ஜூலை 31, 2020 01:30 PM

Google News

ADDED : ஜூலை 31, 2020 01:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு செல்வந்தரின் மகன் தீய பழக்கத்திற்கு ஆளாகி கொண்டிருந்தான். அவனை திருத்த காட்டில் வாழ்ந்த துறவியின் உதவியை நாடினார். செல்வந்தரின் மகனை அழைத்து வரச் சொன்னார் துறவி. இளைஞனுடன் சிறிது நேரம் துறவி காலாற நடந்தார். ஒரு சிறு செடியைக் காட்டி, ''இதை உன்னால் பிடுங்க முடியுமா?” எனக் கேட்டார். இளைஞனும் பிடுங்கினான். சற்று துாரம் நடந்ததும் ஒரு முள் புதரைக் காட்டி பிடுங்க முடியுமா என்று கேட்க இளைஞனும் தனது முழுசக்தியைப பயன்படுத்தி பிடுங்கினான். ஆனால் கையில் முள் குத்தியதால் வலி ஏற்பட்டது. பின்னர் ஞானி சிறிய மரத்தைக் காட்டினார். ''சுவாமி...இதற்கு பெரும் முயற்சி தேவைப்படுமே'' என மறுத்தான். துறவி பெரிய மரத்தைக் காட்டியபடி, ''இதை உன்னால் பிடுங்க முடியாது. கோடரியால் வெட்டத் தான் வேண்டும்'' என்றார். இளைஞன் மவுனமாக நின்றான். அப்போது இளைஞனிடம், ''தீய பழக்கங்களும் இதைப் போலத்தான்! முளையில் எளிதாக கிள்ளி எறியலாம். ஆனால் வளர விட்டால் மீள்வது கடினம். இதைத்தான் திருவள்ளுவர், 'இளைதாக முள்மரம் கொல்க' என கூறியுள்ளார்'' என விளக்கினார்.






      Dinamalar
      Follow us