ADDED : ஜூலை 16, 2021 01:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அசோக சக்கரத்தின் கீழ் 'சத்யமேவ ஜயதே' என எழுதப்பட்டிருக்கும். 'வாய்மையே வெல்லும்' என்பது இதன் பொருள். இது சரியான சொற்றொடரா என்று கேட்டால் இல்லை. 'சத்யமேவ ஜயதி' என்பதே சரியான சொல். ஆனால் வேதகால ரிஷிகளுக்கு வார்த்தைகளின் இனிமை கருதி சொற்களை மாற்றுவதற்கு உரிமை இருந்தது. இந்த முறைக்கு 'ஆர்ஷப் பிரயோகம்' என்று சொல்வர்.
இந்த பிரயோகத்தை ரிஷிகள் மட்டும் பயன்படுத்தலாம். சாதாரண மனிதர்கள் இதனை பயன்படுத்தக் கூடாது. ரிஷிகளின் வேத வாக்கு என்பதால் 'சத்யமேவ ஜயதே' என அப்படியே உச்சரிக்கிறோம்.