
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அபிஷேகத்தின் போது சல்லடை வைத்து அதன் வழியே திரவியங்களை சுவாமிக்கு ஊற்றுவர். தத்துவம் ஒன்று இதில் மறைந்துள்ளது. சல்லடையானது அசுத்தத்தை வடிகட்டி நல்லதை அனுமதிக்கும். இதைப் போல் நாமும் நற்குணங்களை வெளிப்படுத்த வேண்டும்.
* கோயில்களில் உள்ள பெருமாள் சிலைகளை 'அர்ச்சாவதாரம்' என்று சொல்வர்.
* 'கவுஸ்துபம்' என்பது மகாவிஷ்ணு கழுத்தில் அணிந்திருக்கும் மணி.
* தினமும் காலையில் பெருமாள் கோயிலில் பாடுவது 'திருப்பல்லாண்டு'
* மகாவிஷ்ணுவின் பக்தர்களை 'பாகவதர்' என அழைப்பர்.