sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

வினை தீர பாடுங்கள்

/

வினை தீர பாடுங்கள்

வினை தீர பாடுங்கள்

வினை தீர பாடுங்கள்


ADDED : செப் 16, 2022 10:03 AM

Google News

ADDED : செப் 16, 2022 10:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது சிறுமணவூர்கிராமம். இங்கு பிறந்த முனுசாமி என்பவர் 200 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றிய நுால்களுள் 'நடராஜப்பத்து' முக்கியமானது. இப்பத்து பாடல்களையும் நடராஜரின் சன்னதியில் திருவாதிரை, அவருக்குரிய அபிேஷக காலங்களில் படிப்பவர்களுக்கு பதினாறு செல்வங்களும் கிடைக்கும். நடராஜர் நாட்டியத்தால் இந்த உலகம் இயங்குகிறது என்பதை குறிக்கும் பாடல்.

மானாட மழுவாட மதியாட புனலாட

மங்கை சிவகாமி யாட

மாலாட நுாலாட மறையாட திறையாட

மறை தந்த பிரமனாட,

கோனாட வானிலகு கூட்டம் எல்லாமாட

குஞ்சர முகத்தனாட

குண்டலம் இரண்டாட தண்டை புலி உடையாட

குழந்தை முருகேசனாட,

ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி

அட்ட பாலகருமாட

நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட

நாட்டியப் பெண்களாட

வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை

விரைந்தோடி ஆடி வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

சிவகாமிநேசனாகிய தில்லை வாழ்நடராஜரின் பாடல்கள் பத்தையும் படிப்பவர் வாழ்வில் கர்மவினை ஓடும். ஆனந்தம் கூடும்.






      Dinamalar
      Follow us