sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

அண்ணன் தம்பிக்காக சகோதரிகளின் கடமை

/

அண்ணன் தம்பிக்காக சகோதரிகளின் கடமை

அண்ணன் தம்பிக்காக சகோதரிகளின் கடமை

அண்ணன் தம்பிக்காக சகோதரிகளின் கடமை


ADDED : ஆக 05, 2016 09:26 AM

Google News

ADDED : ஆக 05, 2016 09:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாக பஞ்சமி மற்றும் கருடபஞ்சமி தினம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் (ஆக.7) வருகிறது. இந்த நாளில் சகோதரிகள், சகோதரர்களின் நல்வாழ்வு கருதி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். ஒரு காலத்தில், ஒரு பெண்ணின் ஐந்து சகோதரர்களை பாம்பு ஒன்று விரட்டி விரட்டி தீண்டி அவர்களைக் கொன்று விட்டது. பெற்றவர்களை ஏற்கனவே இழந்து விட்ட அந்தப் பெண் அனாதையாகி விட்டாள். அவள் ஆதிசேஷன் மீது துயில் கொள்ளும் பெருமாளை மனதில் எண்ணி தன் சகோதரர்கள் தனக்கு மீண்டும் வேண்டும் என்று கதறியழுதாள். அவளது மனம் ஒன்றிய வேண்டுதலால் இரக்கப்பட்ட திருமால், அந்த சகோதரர்களை உயிர் பிழைக்கச் செய்தார். பஞ்சமி என்ற பெயர் கொண்ட அந்தப் பெண்ணின் பெயரால் இந்த நாளுக்கு நாக, கருட பஞ்சமி என்று பெயர் வந்தது. அன்றுமுதல், அண்ணன், தம்பிகளின் நல்வாழ்வுக்காக சகோதரிகள் அனுஷ்டிக்கும் நிகழ்வாக இது மாறியது. அன்று பகலில் மட்டும் சாப்பிடாமல், திருமாலுக்குரிய பாடல்கள், ஸ்லோகங்கள் சொல்லி பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us