sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

48 நாளில் நோய் தீரும்

/

48 நாளில் நோய் தீரும்

48 நாளில் நோய் தீரும்

48 நாளில் நோய் தீரும்


ADDED : டிச 30, 2021 01:29 PM

Google News

ADDED : டிச 30, 2021 01:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகாபாரதத்தில் விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரம் உள்ளது. தர்மருக்கு பீஷ்மரால் உபதேசிக்கப்பட்டது இது. 150 ஸ்லோகங்கள் கொண்ட இதில் விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள் உள்ளன. சிவன், ராமன், கிருஷ்ணர், லலிதா சகஸ்ர நாமங்கள் என்று இருந்தாலும் விஷ்ணு சகஸ்ரநாமமே புகழ் பெற்றது. இதற்கு ஆதிசங்கரர், பராசரபட்டர், ராகவேந்திரர் மூவரும் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் தத்துவ நெறிகளில் உரை எழுதியுள்ளனர். பாரதப் போருக்கு முன் பகவத்கீதையை அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசித்தார். போர் முடிந்த பிறகு தர்மருக்கு சகஸ்ரநாமத்தை பீஷ்மர் உபதேசித்தார். அதை அப்போது கிருஷ்ணரும் கேட்டு மகிழ்ந்தார்.

பகவானைக் காட்டிலும் அவருடைய திருநாமத்திற்கு மகிமை அதிகம். ஏதாவது நன்மை கருதி விஷ்ணுசகஸ்ர நாமத்தை ஒரு மண்டலம் (48 நாட்கள்) படிப்பர். அரை மண்டலமாக 24 நாள், கால் மண்டலமாக 12 நாள் பாராயணம் செய்யலாம். விஷ்ணு சகஸ்ரநாமத்தை பக்தியுடன் படிக்க நோய்கள் தீரும். உடல்நலம் மேம்படும். பாவம் போக்கும் சக்தியும் இதற்குண்டு.






      Dinamalar
      Follow us