sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

துர்வாசரை விரட்டிய சக்கரம்

/

துர்வாசரை விரட்டிய சக்கரம்

துர்வாசரை விரட்டிய சக்கரம்

துர்வாசரை விரட்டிய சக்கரம்


ADDED : ஜூலை 02, 2021 04:14 PM

Google News

ADDED : ஜூலை 02, 2021 04:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமரின் பரம்பரையில் வந்த அரசர் அம்பரீஷன். அவர் ஏகாதசி விரதத்தை சிரத்தையுடன் அனுஷ்டிப்பார். விரதம் முடிந்ததும் ஒருவருக்கு அன்னமிட்டு சாப்பிடுவார். ஒருமுறை கோபக்காரரான துர்வாசமுனிவர் வந்தார். அவரை சாப்பிட அழைத்ததும், துர்வாசர் பூஜை முடித்தபின் வருவதாகக் கூறிச் சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. திதி முடிய சில நிமிடமே இருந்ததால் அம்பரீஷருக்கு என்ன செய்வதென தெரியவில்லை. துர்வாசரை விட்டுச் சாப்பிட்டால் அவருக்குக் கோபம் வரும். சாப்பிடாமல் இருந்தால் ஏகாதசி திதி முடிந்து விடும். எனவே பெரியோர் ஆலோசனைப்படி சிறிது தீர்த்தம் அருந்தி விரதம் முடித்தார். அப்போது துர்வாசர் அங்கு வர, தன்னை மதிக்காமல் விரதம் முடித்த அம்பரீஷன் மீது ஒரு பூதத்தை ஏவினார். அது அவனைக் கொல்லப் போயிற்று.

உடனே விஷ்ணுவின் சுதர்சன சக்கரம் தோன்றி பூதத்தைக் கொன்றதோடு துர்வாசரைத் துரத்தியது. துர்வாசர் முதலில் பிரம்மாவிடம் ஓடினார். சக்கரத்தைத் தன்னால் தடுக்க முடியாது என்று அவர் சொன்னதால் சிவனிடம் ஓடினார். அதைத் தடுக்கும் உரிமை தனக்கில்லை என சிவனும் மறுத்தார். முடிவில் மகாவிஷ்ணுவிடம் சரணடைந்தார்.

''நான் பக்தர்களின் அன்புக்கு கட்டுப்பட்டவன். என்னாலும் தடுக்க முடியாது. அம்பரீஷன் மன்னித்தால் பிரச்னை தீரும்'' என்றார் விஷ்ணு. பின் சுதர்சனத்திடம் துர்வாசரை விட்டு விடும்படி அம்பரீஷன் கேட்ட பின்னரே துர்வாசர் உயிர் தப்பினார்.






      Dinamalar
      Follow us