
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாடு செழிக்க நதிகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆடிப்பெருக்கு நன்னாளை முன்னோர்கள் தேர்ந்தெடுத்தனர். காவிரிக்கரை மாவட்டங்களில் இந்நாள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்நாளில் தொடங்கும் புதிய முயற்சி விரைவில் நிறைவேறும். அன்று பக்தர்கள் காவிரியில் நீராடி காவிரியை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரத்தை ஆற்றில் சமர்ப்பிப்பர். புதிதாக திருமணமானவர்கள் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர். இதனை தாலி பெருக்குதல் என்று குறிப்பிடுவர். இந்நாளில் கொடி தாவரங்களான அவரை, பீர்க்கு, புடலை, பூசணி விதைகளை விதைப்பர். புதுமனையில் பால் காய்ச்சவும், தங்கம், வெள்ளி ஆபரணம் வாங்கவும் ஆடிப்பெருக்கு ஏற்ற நாளாகும். தட்சிணாயன புண்ணிய காலமான ஆடியில் விவசாயிகள் உழவுப்பணி துவங்குவர். ஆடிப் பட்டம் தேடி விதை என்னும் பழமொழியும் உண்டு.