ADDED : பிப் 10, 2017 11:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜஸ்தான் மாநிலத்தில் வெப்பம் மிக அதிகம். ஒரு சமயம், வெயிலின் கடுமையால் 'லூ' என்னும் வெப்புநோய் மக்களை தாக்கியது. இதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள நீண்ட, அடர்த்தியான தலைப்பாகையை மக்கள் அணிந்து கொண்டனர். அம்மாநிலத்திற்கு விவேகானந்தர் சென்ற போது, அவரை 'லூ' நோய் தாக்காமல் இருக்க, ராஜஸ்தான் மன்னர் தலைப்பாகை கட்டிக் கொள்ளும்படி வேண்டினார். விவேகானந்தரும் ஆர்வத்தோடு தலைப்பாகை கட்டிக்கொண்டார். பின், அது நிரந்தரமாயிற்று. விவேகானந்தரின் தனித்தன்மையில் ஒன்றாக தலைப்பாகை இடம் பிடித்தது.

