நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் மனம், வாக்கு, காயத்தால் (எண்ணம், சொல், செயல்) துாய்மையுடன் இருக்க வேண்டும். இதை 'திரிகரண சுத்தி' என்பர். அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி பக்தியுடன் சரண கோஷம் சொல்ல வேண்டும். கரடுமுரடான மலைப் பகுதியில் குளிர்ச்சி மிக்க பனிக்காலத்தில் செல்ல வேண்டும் என்பதற்காகவும், மன அடக்கத்திற்காகவும் விரதத்தில் கடுமை காட்டப்பட்டுள்ளது.

