
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமகிருஷ்ணர் தட்சிணேஸ்வரம் காளிகோயிலில் அர்ச்சகராகப் பணிபுரிந்தார். ஒரு பக்தர் அங்கு வந்து அவரிடம் பேசினார்.
''ஐயா! நீங்கள் காளியைப் பார்த்திருக்கிறீர்களா?''
''ஓ! பார்த்திருக்கிறேனே! இன்று காலையில் கூட அவளிடம் பேசிக் கொண்டிருந்தேன்,''.
''நீங்கள் சொல்வது உண்மையானால், அவளை எனக்காக வரவழையுங்கள்,''.
''நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?''
''டாக்டர்''
''அப்படியானால் இப்போதே என்னை டாக்டராக்குங்கள் பார்க்கலாம்,''.
''அதெப்படி முடியும்? படித்தால் தானே முடியும்,''.
''படித்தால் தான் மருத்துவராக முடியும் என்பது போல, காளியைக் காணவும் பக்தி என்கிற படிப்பு வேண்டும். அதைப் படித்துவிட்டு வாருங்கள்'' என்றார் ராமகிருஷ்ணர்.

