ADDED : ஜூலை 24, 2020 09:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மார்க்கண்டேயரின் ஆயுள் விதிப்படி மரண நாள் வந்ததும் எமன் அவரது உயிரை பறிக்க வந்தான். மார்க்கண்டேயர் திருநீறு பூசியபடி, திருக்கடையூர் சிவலிங்கத்தை அணைத்துக் கொண்டார். ஆனால் எமன் சன்னதிக்குள் நுழைய முயன்றதால் காலால் உதைத்து தள்ளினார் சிவன். இதன்பின் துாதர்களிடம், “திருநீறு பூசியவர்களை கண்டால் வணங்கிச் செல்லுங்கள்,” என உத்தரவிட்டான் எமன். திருநீற்றை பூசும் போது கீழே சிந்தாமல் 'சிவாயநம' என்று சொல்லி பூச வேண்டும். இதனால் மனத்துாய்மை, புண்ணியம் உண்டாகும்.