
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உங்களை நீங்களே ஆளக் கற்றுக் கொள்ளுங்கள். வாழ்வில் உயர்வதற்கு இதுவே சிறந்த வழி.
* மன தைரியத்தை விட சிறந்த புண்ணியம் வேறில்லை. எல்லா இன்பங்களையும் தைரியத்தால் அடைய முடியும்.
* செயலில் ஈடுபடும் முன் அதற்கான பயன் இதுவென தெரிந்து கொண்ட பின்னரே தொடங்க வேண்டும்.
* கடவுள் என்னும் சத்தியம் ஒன்றே. அதை அடையும் முயற்சி மேற்கொள்பவன் ஆனந்தம் அடைவான்.
*எந்தச் செயலுக்கும் காலம் ஒத்துழைத்தால் ஒழிய நிறைவேறுவது சாத்தியமாகாது.
-பாரதியார்