
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நேர்மையாக வாழ்வதே சிறந்த தவம். தனிமையிலும், மற்றவர் மத்தியிலும் நேர்மையைப் பின்பற்றுங்கள்.
* அணு அளவும் பிறரை ஏமாற்றாமல் வாழ்பவனை கடவுளுக்கு நிகராக உலக மக்கள் மதிப்பர்.
* உழைப்பதில் தான் உண்மையான சுகம் இருக்கிறது. வறுமை, நோய் போன்ற குட்டிப் பேய்கள் எல்லாம் உழைப்பைக் கண்டால் ஓடி விடும்.
* பிறரிடம் எதற்காகவும் கையேந்தக் கூடாது. பிறரிடம் கையேந்தி வாழ்பவன் தன்னைத் தானே விலைப்படுத்திக் கொள்கிறான்.
-பாரதியார்