ADDED : ஜன 11, 2010 03:32 PM

<P>* அறிவில் தெளிவும், ஓயாமல் கடமைகளைச் செய்யும் குணமும் கொண்டிருந்தால் எந்தச் செயலும் நல்லதாகவே முடியும்.<BR>* நம் அறிவில் தெய்வத்தன்மை காணப்படுகிறது. ஒரு தேவனைப் போலவே சிந்தனை செய்யும் சக்தி நம்மிடம் இருக்கிறது. எனவே, நமது செயல்களிலும் தெய்வத்தன்மை விளங்குவதற்குரிய வழிவகையைச் செய்ய வேண்டும். <BR>* உலகம் நமது அறிவிற்கு அடங்காத ஒன்றல்ல. சித்தம் (மனம்) நமக்கு வசமாகும்போது, உலகமும் நமக்கு வசமாகிவிடும். <BR>* இடைவிடாமல் கடமைகளைச் செய்யுங்கள். பெருமைப்படும்படி வாழுங்கள். இயலாவிட்டால் விதிவசம் என்று மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுங்கள்.<BR>* மனதை உற்சாக நிலையில் வைத்துக் கொண்டால் உடம்பிலே தீவிரமுண்டாகும். உடம்பைத் தீவிரமாகச் செய்து கொண்டால், உற்சாகம் பிறக்கும். மனத்தளர்ச்சிக்கு சிறிதும் இடம் கொடுக்கக்கூடாது.<BR>* உலகத்தார் அகங்காரம் என்ற அசுரனுக்கு வசப்பட்டு நரக துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அகங்காரம் அகன்று விட்டால், மனிதஜாதி தெய்வநிலையைப் பெறலாம்.<BR><STRONG>-பாரதியார் </STRONG></P>