
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் மட்டும் அக்கறை செலுத்தாமல், உடல்நலத்திலும் கவனம் செலுத்துவது அவசியம்.
* குடும்ப வாழ்வே மற்றெல்லா வாழ்க்கையிலும் சிறந்ததாகும்.
* எந்தச் செயலுக்கும் காலம் ஒத்து நின்றால் ஒழிய, அதனை நிறைவேற்றுதல் மனிதனுக்கு சாத்தியமில்லை. விதியின் வலிமை பெரியதாகும்.
* நமக்கு முடியாத செயலைக் கைவிடக் கூடாது. திறமையுள்ளவனிடம் தொழிலைப் பழகிக் கொண்டு பிறகு நாமாகச் செய்ய வேண்டும்.
* விடாமுயற்சியும், தெய்வ பக்தியும், அறிவிலே விடுதலையும் இருக்குமானால் மனவலிமை உண்டாகும்.
* எந்தவிதமான ஆபத்து வந்தாலும், கவலைப்படுவது கூடாது. தீவிரமாக முயற்சியில் இறங்கினால் அவை தாமே காணாமல் போய் விடும்.
- பாரதியார்