sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

இன்பத்திற்கு வழிகாட்டுபவன்

/

இன்பத்திற்கு வழிகாட்டுபவன்

இன்பத்திற்கு வழிகாட்டுபவன்

இன்பத்திற்கு வழிகாட்டுபவன்


ADDED : ஏப் 23, 2012 11:04 AM

Google News

ADDED : ஏப் 23, 2012 11:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கண்ணன் என் தந்தை. அதனால், என்னிடம் செல்வத்திற்கு ஒருபோதும் குறைவில்லை. உள்ளத்தில் செருக்கு உண்டானால் அதை அழிக்க அவன் கோபத்தில் சீறிப் பாய்வான்.

* நல்லவர்களுக்குத் தீமை வராமல் காத்தருளும் கண்ணன், தீயவர்களுக்கு கொடுமை செய்வான்.

* ஒருநாள் இருந்தது போல மறுநாள் அவன் இருப்பதில்லை. விதி என்னும் அமைச்சரைக் கொண்டு தன் விருப்பம் போல ஆட்சி செய்வான்.

* பிறப்பால் உயர்வு தாழ்வு கருதும் பொய்க்கருத்துகளுக்கு கண்ணனிடம் அனுமதியில்லை. நடுவுநிலையைப் பின்பற்றினால் மகிழ்வான்.

* உலகியல் துன்பம் கண்டு உள்ளம் வருந்தினால் புன்னகையுடன் சிரித்துப்பேசி நம் துன்பத்தை நொடியில் போக்குவான்.

* அன்பினைக் கைக்கொண்டால் துன்பம் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று அறிவுரை கூறுவான். அறவழியில் நடப்போருக்கு எப்போதும் இன்பமே உண்டாகும் என்று வழிகாட்டுவான்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us