sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

எங்கள் வாழ்வு உனது கையில்!

/

எங்கள் வாழ்வு உனது கையில்!

எங்கள் வாழ்வு உனது கையில்!

எங்கள் வாழ்வு உனது கையில்!


ADDED : ஜூன் 06, 2010 04:06 PM

Google News

ADDED : ஜூன் 06, 2010 04:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* விண்ணையும், மண்ணையும் காக்கும் சக்திதேவியே! வீரத்தின் விளைநிலமே! உன்னையே எங்கள் கண்ணும் கருத்துமாய் எண்ணி வாழ்கிறோம். அன்புடன் கசிந்துருகி வழிபாடும் செய்கிறோம். எங்கள் மீது உன் அருட்கண்ணை நோக்கு.

* எங்களுக்கு நல்ல வழியில் செல்வத்தையும், அந்த நிதியைக் காக்கும் திறமையையும் தர வேண்டுமென பணிந்து கேட்கிறோம். உன் புகழைப் பாடுவதில் இருந்து என்றும் ஓய மாட்டோம். எங்களைப் பாதுகாப்பது உன் பொறுப்பு.

* காளீஸ்வரியே! வல்லமை மிக்க சாமுண்டித்தாயே! நீ எங்களை துன்பத்தில் இருந்து பாதுகாத்து, விரும்பிய வரத்தை அருள வேண்டும். அம்மா! உன்னுடைய தாமரைப் பாதத்தில் விழுந்து அபயம் கேட்கிறோம். அதை தர உனக்கு விருப்பமில்லாவிட்டால் எங்கள் உயிரை எடுத்துக் கொள்.

* உன்னிடம் கேட்கும் வரங்களை இன்றே எங்களுக்கு அருள வேண்டும். எங்கள் வாழ்வுக்கு தடையாய் இருக்கும் முன்வினைப்பயன்களை அடியோடு போக்க வேண்டும். எங்களுக்கு புதிய பிறப்பினைத் தர வேண்டும். அறிவுத்தெளிவும், மகிழ்ச்சியும் அருள வேண்டும்.

-பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us