ADDED : பிப் 01, 2017 11:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நம்பிக்கை இருக்குமிடத்தைத் தேடி வெற்றி வரும். விடாமுயற்சி ஒன்றே நம்பிக்கையின் அடையாளம்.
* எதிரிகள் நமக்கு வெளியுலகத்தில் இல்லை. பயம், சந்தேகம், சோம்பல், கோபம் போன்ற பண்புகள் நமக்குள் எதிரிகளாக இருக்கின்றன.
* பிறருக்கு புத்தி சொல்வது யாருக்கும் எளிது. ஆனால், சொன்னவரே அதன்படி நடப்பது என்பது மிக அரிதான செயல்.
* உழைப்பால் உடம்பை எப்போதும் சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
- பாரதியார்