
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனதில் கோபம் என்னும் இருள் சூழ இடம் கொடுக்காதே. இது நீங்க சாஸ்திரங்கள் சொல்வதைக் கேள்.
* உடலை உறுதிப்படுத்தி உன் வசமாக்கு. இல்லாவிட்டால் வாழ்வு துன்பமயமாகி விடும்.
* அச்சம் கொண்டவன் அறிவாளியாக இருக்கமாட்டான். அறிவே எல்லா செல்வங்களுக்கும் வேராக இருக்கிறது.
* மதிப்புடன் வாழ்ந்த மனிதனுக்கு உண்டாகும் பழிச்சொல் மரணத்தை விட கொடிய துன்பம் தரும்.
- பாரதியார்