ADDED : ஏப் 30, 2013 11:04 AM

* தீயதை நல்லதென்றும், நல்லதைத் தீயதென்றும் சொல்லுபவர்களுக்குத் துயரம் தான் மிஞ்சும்.
* மனிதர்களே! நீங்கள் சகோதரர்களாக இருக்கிறீர்கள். ஒருவருக்கொருவர் ஏன் தீங்கு செய்து கொள்ளுகிறீர்கள்?
* எவனும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
* முகத்தோற்றத்தைக் கொண்டு முடிவு செய்யாதே. நேர்மையான நியாயத்தைப் பார்த்துத் தீர்ப்புச் சொல்.
* வாலிபர்களே, கன்னிப்பெண்களே, கிழவர்களே, குழந்தைகளே கர்த்தரைத் துதியுங்கள்.
* கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள் உங்களுக்கு திறக்கப்படும்.
* தீமையைச் செய்து துன்புறுவதை விட நன்மையைச் செய்து துன்புறுவதே மேல்.
* தீடீர் என்று எந்த மனிதன் மீதும் கை வைத்து விடாதே. மற்றவனின் பாவத்திற்கு நீ பங்காளியாகவும் ஆகாதே. உன்னைத் தூயவனாகக் காப்பாற்றிக் கொள்.
* வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
- பைபிள் பொன்மொழிகள்