sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

இறைவனுக்கு மனசு கேட்காது

/

இறைவனுக்கு மனசு கேட்காது

இறைவனுக்கு மனசு கேட்காது

இறைவனுக்கு மனசு கேட்காது


ADDED : ஆக 31, 2011 09:08 AM

Google News

ADDED : ஆக 31, 2011 09:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பக்தி செலுத்துவதால் முக்தி கிடைத்துவிடும் என்றால், நாம் செலுத்தும் பக்தியே நேராக முக்தியைக் கொடுத்து

விடுகிறது என்று அர்த்தமில்லை. நாம் செய்யும் செயல் எதுவுமே தானாக எந்தப் பலனையும் தருவதில்லை. பலன்களைத் தருபவர் ஈஸ்வரனாகவே இருக்கிறார்.

* பாவ புண்ணியம் பார்த்து அனைவருக்கும் அனைத்து பலன்களையும் ஈஸ்வரன் முறையாக வழங்குகிறார். நாம் செலுத்தும் பக்திக்குப் பலனாக அருளை வழங்குவதுடன், ஞானத்தின் பலனாக மோட்சத்தையும் வழங்குகிறார். பலன் தருவது நாம் செய்யும் பக்தியே அல்ல. அதற்குப் பதிலாக ஈஸ்வரன் அளிக்கும் அருள் தான் பலனைத் தருகிறது.

* பக்தி நிஜமானதாக இருந்தால் பக்தன் பலனை எதிர்பார்க்க மாட்டான். எதிர்பார்ப்பு இருந்தால் அது வியாபாரம் தானே தவிர பக்தியில்லை. இப்படி பலன் வேண்டாம் என்றால் நிஜமான பக்தியைப் பெற்றுக் கொண்ட இறைவனுக்கு மனசு கேட்காது. அதனால் அருளை அளிப்பதுடன், ஞானத்தையும் அருள்வான். பக்தனை உலக வாழ்விலிருந்து விடுவித்து வீடு பேறும் அருள்வான்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us