
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வெளியுலக அறிவுக்கு துணை நிற்பது விஞ்ஞானம். உள் உலகமாகிய உண்மைக்கு வழிகாட்டுவது மெய்ஞானம்.
* திருமந்திரத்தில், அன்பே சிவம் என்கிறார் திருமூலர். அறிவான தெய்வமே என்று இறைவனைக் குறிப்பிடுகிறார் தாயுமானவர். அன்பையும், அறிவையும் நாம் ஒவ்வொருவரும் பெற முயற்சிக்க வேண்டும்.
* இந்த உலகை விட்டுச் செல்லும் முன் 'என்னிடம் பாவமே இல்லை' என்று சொல்லும் நிலையை அடைய வேண்டும்.
* மனிதன் மனதால் உயர்நிலையை அடைய வேண்டும். அப்போது மனிதன், வாழ்க்கையை நடத்திச் செல்வது சிரமமாகவே இருக்காது.
* மனதை கீழ்நிலைக்குச் செலுத்தாமல், மேல்நிலைக்கு உயர்த்தினால் தெய்வநிலையை அடையலாம். கடவுளின் திருவடியை கெட்டியாக பிடித்துக் கொண்டால் தான், உயர்ந்த நிலையை அடைய முடியும்.
-காஞ்சிப்பெரியவர்