
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஒரு கையால் கடவுளின் திருவடியைப் பிடித்துக் கொண்டே இன்னொரு கையால் உலக விஷயங்களில் ஈடுபடுங்கள்.
* தினமும் தியானம் செய்யுங்கள். குடும்பத்திலுள்ள அனைவரையும் செய்யச் சொல்லுங்கள்.
* தர்மம் செய்ய நினைத்தால் தாமதிப்பது கூடாது. நினைத்தவுடன் செயல்படாவிட்டால் மனம் மாறி விடும்.
* சமூக சேவையில் ஈடுபடுவோருக்கு மனதில் அமைதியும், முகத்தில் புன்சிரிப்பும் அவசியம்.
* மற்றவருக்கு உபதேசம் செய்ய வேண்டாம். தவறேதும் செய்யாமல் இருந்தாலே போதும்.
- காஞ்சிப் பெரியவர்