ADDED : ஆக 08, 2010 09:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இறைவன் கூறுகின்றான்:
* ''வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்! நாம் தாம் அவர்களுக்கும் உணவளிக்கிறோம்; உங்களுக்கும் உணவளிக்கிறோம். உண்மையில் அவர்களைக் கொலை செய்வது பெரும் பாவமாகும்.''
திருக்குர்ஆன்(17:31)
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
* ''ஒருவன் தன் பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்காமலும், கொடுமைப்படுத்தாமலும், ஆண் குழந்தையுடன் ஒப்பிடும்போது வேறுபாடு காட்டாமலும் இருந்தால் இறைவன் அவனை சுவனத்தில் நுழையச் செய்வான்''
(நூல்: அபூதாவூத்)
* '' உங்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்வது உங்கள் குழந்தைகளின் கடமை; உங்கள் குழந்தைகளைச் சமமாக நடத்துவது உங்களின் கடமை!''
(நூல்: அபூதாவூத்)
* ''தந்தை தன் பிள்ளைக்கு அளிக்கும் மாபெரும் பரிசு நல்லொழுக்கமே!''
(நூல்: திர்மிதி)
(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)