
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கஞ்சத்தனத்தைப் பற்றிப் பயந்து கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் முன்னோர்கள் கஞ்சத்தனத்தின் காரணமாகத்தான் அழிந்து போனார்கள்.
* ஒருவர் தருமம் செய்கிறாரென்றால் அவர் அல்லாஹ்வின் மீது கொண்ட நல்லெண்ணத்தின் காரணமேயாகும்.
* ஒருவர் தருமம் செய்வதில் கஞ்சத்தனம் செய்கிறார்என்றால் அவர் அல்லாஹ்வின் மீது கொண்ட நம்பிக்கை கொள்ளாத தவறான எண்ணத்தின் காரணமேயாகும்.
* தருமம் கொடுப்பதினால் இருக்கும் செல்வம் அழிந்து போவதில்லை.
* கருணை உள்ளம் கொண்டவன் தங்கும் இடம் சொர்க்கமாகும்.
* அனாதை பிள்ளைகளின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள். ஏழை எளியவர்களுக்கு உணவு கொடுங்கள்.
- நபிகள் நாயகம்