
* பெற்றோரின் பிரியத்தில் தான் அல்லாஹ்வின் பிரியமும் இருக்கிறது. பெற்றோரின் கோபத்தில் தான் அல்லாஹ்வின் கோபமும் இருக்கிறது.
* உன் தந்தையின் உறவை பாதுகாத்துக் கொள். அதை முறித்து விடாதே. முறித்துக் கொண்டால் உன்னுள் இருக்கும் ஒளியை அல்லாஹ் போக்கி விடுவான்.
* உங்களுடைய தந்தைக்கு நீங்கள் நன்றி செலுத்துங்கள். உங்கள் மகன் உங்களுக்கு நன்றி செலுத்துவான்.
* பெற்றோரை வேதனை செய்பவனை இறைவன் எத்தனை வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டாலும் மன்னிக்க மாட்டான்.
* வயது வந்த பெற்றோர்களுக்கு பிள்ளைகள் செலவு செய்யவில்லையானால் சுவர்க்கம் நுழைய முடியாது.
* பெற்றோர் அநியாயம் செய்தாலும் அவர்களிடம் பிள்ளைகள் அன்பை செலுத்துவது கட்டாய கடமையாகும்.
* பெற்றோரை மனம் நோகச் செய்து அவர்கள் அழுது கண்ணீர் வடிக்கச் செய்வது பெரும்பாவமாகும்.
* மகன் பேரில் தகப்பனுக்குரிய கடமையைப் போன்று, உடன்பிறந்த அண்ணனுக்குரிய கடமையாகும்.
- நபிகள் நாயகம்