/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
ராமகிருஷ்ணர்
/
கடவுளை அடைய மூன்று வழிகள்
/
கடவுளை அடைய மூன்று வழிகள்
ADDED : ஆக 19, 2008 07:09 PM

<P>வாழ்வு என்னும் கடலில் வேகமாக முன்னேற விரும்பினால் செய்ய வேண்டியது ஒன்றே. உங்கள் மனப்படகின் பாயை விரித்து விடுங்கள். ஆண்டவனுடைய அருட்காற்று இரவுபகலாக உங்களின் தலைக்கு மேல் வீசும்.</P>
<P>இறைவனிடம் தன் மனதை ஒப்படைத்தவன் தீய எண்ணம் படைத்தவர்களுடன் இருந்தாலும் எந்தவிதமான தீமையையும் அடைய மாட்டான். </P>
<P>மனிதன் இறைவனை எங்கு தேடியும் காணாமல் அலைகிறான். அதை அறிந்து கொள்ளாது அவன் உலகெல்லாம் தேடி அலைந்து திரிகிறான். அவன் தேடும் இறைவன் அவன் உள்ளத்திலேயே வீற்றிருப்பதை உணராமல் தவிக்கிறான்.</P>
<P>வேக வைத்த நெல்லை பூமியில் விதைத்தால் அது முளைப்பதில்லை. அதுபோல, உண்மை ஞானம் என்னும் நெருப்பினில் புடமிட்ட உயிர்கள் மீண்டும் மண்ணுலகம் வருவதில்லை. ஆனால், அஞ்ஞானம் கொண்டு அலையும் உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கின்றன. </P>
<P>இல்லறத்தில் இருப்போர் உயிர்களிடத்தில் அன்பு, எளியவர்களுக்குச் சேவை, கடவுளின் திருநாமத்தில் பக்தி இவற்றை தவறாது பின்பற்றி வந்தாலே கடவுளை அடைய முடியும்.</P>
<P>தன் உண்மைத் தன்மையை மறைத்து வெறும் வேஷம் போடுபவனும் , எதிலும் தன்னை மட்டுமே முன்னிறுத்தி சுயலாப நோக்கத்தோடு செயல் புரிபவனும், பிறருக்கு அநீதி இழைப்பவனும், ஒழுக்கநெறி தவறுபவனும் என்றைக்கும் கடவுளை அடைய முடியாது.</P>