
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நீ விரும்புவதை எல்லாம் கடவுள் மட்டுமே தருவார் என்று நம்பிக்கை கொள். அவரிடம் உன்னை முழுமையாக ஒப்படைத்து விடு.
* மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதற்கு விடை தேட வேண்டாம். எதிர்காலத்தை எதிர்காலமே கவனித்துக் கொள்ளும்.
* மனிதன் தானே எல்லாவற்றையும் செய்வதாக எண்ணி துன்பத்தை வரவழைத்துக் கொள்கிறான்.
* கடவுளின் கையில் நீ ஒரு கருவி என்று எண்ணிக் கொள். இதன் மூலம் துன்பத்தில் இருந்து முழுமையாக விடுபடுவாய்.
-ரமணர்