
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உலகில் பணமே முக்கியம். பணத்தால் தான் எல்லாம் இயங்குகிறது.
* பிறர் செய்த உதவியை மறந்தவர்களுக்கு நரகமே கிடைக்கும்.
* வறுமை, நோய், கஷ்டம், சிறைவாசம் போன்றவை அவரவர் செய்த பாவத்தின் விளைவு.
* நல்லவர்கள் சொல்லும் கடுஞ்சொற்கள் நல்ல வாழ்வு தரும்.
* கெட்டவர்கள் தவறான பாதையில் செல்வார்கள்.
* நட்சத்திரங்களுக்கு அணிகலன் சந்திரன். மனைவிக்கு அணிகலன் கணவன்.
* அளவாக சாப்பிடும் மனநிலையை வளர்த்துக்கொள்.
* பயமும், தயக்கமும் தோல்விக்கான அறிகுறி.
* ஆற்றுநீர் போல் ஒரே திசையை நோக்கி முன்னேறு.
* மது அருந்துபவன் அறிவு, உறவினர், நண்பர்களை இழப்பான்.
* சந்தேகத்துடன் ஒரு செயலை தொடங்கினால் சங்கடத்தில் முடியும்.
* இக்கட்டான சூழல் வந்தால் உறவினர், நண்பர்களின் உண்மையான முகத்தை அறியலாம்.
சாணக்கியர்

