
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பிறருடைய பசியைப் போக்குவதோடு நமது கடமை முடிந்து விடுவதில்லை. அவர்களின் துன்பத்தையும் களைய முயற்சிக்க வேண்டும்.
* அரிதான மானிட தேகம் எல்லா உயிர்களுக்கும் கிடைப்பதில்லை. இதைப் பாதுகாத்து திடமாக வைத்துக் கொள்வது நம் கடமை.
* கற்பனை அனைத்தையும் கடந்தவன் இறைவன். அவனை நம் கற்பனை எல்லைக்குள் கொண்டு வர இயலாது.
* அம்பை ஏவி விட்டவனுக்குப் பதிலாக, அம்பையோ, அம்பு செய்து கொடுத்தவனையோ நொந்து கொள்வதால் ஒருபயனும் இல்லை.
* உத்தமர் தம் உள்ளத்தில் கடவுள் பிரணவ ஒளியாக வீற்றிருப்பார். அவர் எண்ணம், சொல், செயல் அனைத்தும் புனிதமானதாக இருக்கும்.
* பிறர் தயவை நாடாமல் மனிதன் வாழ வேண்டும். தன்னை நாடி வருபவர்களுக்கு அள்ளி வழங்கும் நல்ல மனம் பெற்றிருக்க வேண்டும்.
- வள்ளலார்