/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
விவேகானந்தர்
/
உலகை மாற்றும் ஒற்றைச்சொல்
/
உலகை மாற்றும் ஒற்றைச்சொல்
ADDED : மார் 11, 2013 10:03 AM

* நீங்கள் எல்லை இல்லாத வலிமை பெற்றவர்கள். உங்களின் உண்மை இயல்போடு ஒப்பிடும்போது காலமும் இடமும் கூட ஒரு பொருட்டல்ல.
* இல்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். என்னால் இயலாது என்று எதையும் மறுக்காதீர்கள். எதையும் உங்களால் சாதிக்க முடியும்.
* பலவீனத்திற்குப் பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பதே.
* உபநிஷதங்களில் இருந்து கிளம்பி, அறியாமைக் குவியல் மீது குண்டைப் போல வெடிக்கும் சொல் 'அஞ்சாமை' என்பது தான். இந்த ஒற்றைச் சொல்லில் தான் வேதத்தின் சாரம் அடங்கியிருக்கிறது. இந்தச்சொல் தான் உலகையே மாற்றி அமைக்கும்.
* கடுமையாக உழைக்க முன்வந்தால் குறிக்கோளை எளிதில் அடையலாம்.
* மனதில் வலிமை இருந்தால் மகிழ்ச்சியும் வளமும் நிறைந்த நிரந்தரமான வாழ்வு கிடைக்கும். பலவீனம் இருந்தால் இடையறாத துன்பமும், சித்திரவதையுமாக வாழ்வு அமையும்.
- விவேகானந்தர்