ADDED : மார் 31, 2013 10:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நல்லவனாக இருந்து மற்றவர்களுக்கு இயன்ற நன்மைகளைச் செய்து வருவதே ஆன்மிக வாழ்வின் அடிப்படை நெறிமுறை.
* பகை, பொறாமை போன்ற தீயகுணங்களை வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்துவிடும்.
* பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனை தெய்வமாகவும் உயர்த்துவதே சமயத்தின் நோக்கம்.
* எந்தக் காலத்திற்கும் தியாகம் தான் வாழ்விற்குரிய விதியாக இருக்கப் போகிறது.
* மன அமைதி பெற்று வாழ்வது தான் மதங்களின் அடிப்படை லட்சியம். மதத்தின் பெயரால் மனிதன் சச்சரவு செய்வது கூடாது.
* இந்த உலகம் ஒரு பெரிய உடற்பயிற்சிக்கூடம். அதில் நம்மை வலிமையுடையவர்களாக்கவே நாம் வந்திருக்கிறோம்.
* தெய்வீகத்தன்மை இல்லாத மிதமிஞ்சிய அறிவும் ஆற்றலும் மனிதனை கீழ்நிலைக்குத் தள்ளிவிடும் சக்தி படைத்தவை.
- விவேகானந்தர்