
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கைம்மாறு கருதாமல் மழை போல அனைவருக்கும் உதவி செய்யுங்கள்.
* சுயநலம் இல்லாமல் அக்கறையுடன் பணியாற்றினால் வெற்றி அடைவீர்கள்.
* எதிர்பார்ப்பின்றி அன்பு செலுத்துங்கள். சுயநலமான அன்பு அர்த்தமற்றது.
* ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒரு சொந்த லட்சியத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
* எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் பணிவை மட்டும் மறந்து விடாதீர்கள்.
* குறிக்கோளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அதனை அடையும் பாதைக்கும் அளியுங்கள்.
-விவேகானந்தர்