
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன. அதனால், முதலில் உன்னிடத்தில் நம்பிக்கை வை.
* கத்தி முனையில் நடப்பது போல, பாதை மிகவும் கடினமானதாக இருந்தாலும் மனம் தளராமல் வெற்றி நடை போடு.
* யார் எதைச் சொன்னாலும் பொருட்படுத்தாதே. கொள்கைப் பிடிப்புடன் செயலாற்றிக் கொண்டிரு.
* நீ வரம்பிலா வலிமை படைத்தவனாக இருக்கிறாய். 'என்னால் இயலாது' என்று மறந்தும் சொல்லாதே.
* யாரிடமும் எதுவும் எதிர்பார்த்துக் காத்திருக்காதே. சுதந்திரமானவனாக இருக்க கற்றுக்கொள்.
- விவேகானந்தர்