ADDED : மார் 11, 2015 03:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனதில் பலம் நிறைந்திருந்தால், உங்களின் விதியை நீங்களே வகுத்துக் கொள்ள முடியும்.
* பிறருக்கு கொடுத்து உதவுங்கள். உதவி பெறுபவரைக் கடவுளாகவே மதியுங்கள்.
* யார் வேண்டுமானாலும் தலைவனாக செயல்படலாம். ஆனால், நல்ல தொண்டனாக இருப்பது கடினம்.
* மகத்தான செயல் எதுவும் கடின உழைப்பு இல்லாமல் சாதிக்க முடிவதில்லை.
* வெற்றியில் விருப்பம் இருக்குமானால், ஆணவத்தை முதலில் ஒழித்து விடுங்கள்.
* மனத்துாய்மை மிக்கவர்கள் இந்த பிறவியிலேயே கடவுளைக் காண்பது உறுதி.
விவேகானந்தர்