ADDED : டிச 01, 2013 10:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நமது வாழ்க்கை சிறந்ததாகவும், தூய்மையானதாகவும் இருந்தால் மட்டுமே உலகமும் சிறப்புடையதாக இருக்கும்.
* அறியாமையுடன் வாழ்வதைக் காட்டிலும், போரில் ஈடுபடும் வீரனைப் போல போராடி மாய்வதே மேலானது.
* உண்மை எங்கே இழுத்துச் சென்றாலும், அதைப் பின்பற்றுங்கள். நேர்மையின் பாதையில் செல்லுங்கள். கோழையாகவும், வேடதாரியாகவும் இருக்காதீர்கள்.
* கொடுக்கும் சக்தி உங்களிடம் உள்ள வரையில் கொடுங்கள். அது ஆயிரம் மடங்காகப் பெருகி உங்களிடமே மீண்டும் வரும்.
* எல்லாவற்றையும் செவி சாய்த்துக் கேளுங்கள். உங்களுக்கு எது நல்லதென்று படுகிறதோ, அதை உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.
* தன்னை அடக்கிப் பழகிக் கொண்டவன் வேறு எதற்கும் வசப்பட மாட்டான். அத்தகையவனே உலகில் நன்றாக வாழத் தகுதி படைத்தவன்.
- விவேகானந்தர்