
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உழைக்கத் தொடங்குங்கள். உலகில் தோன்றியதன் அறிகுறியாக ஏதேனும் நல்ல அடையாளத்தை நாம் விட்டுச் சென்றாக வேண்டும்.
* தைரியம், விடாமுயற்சி கொண்டிருங்கள். துணிவுடன் செயலாற்றினால் வெற்றி உறுதி. எதற்காகவும் எள் அளவும் விட்டுக் கொடுத்தல் கூடாது.
* வஞ்சனையால் எதையும் செய்திட முடியாது. நேர்மை, உண்மை, ஆர்வமும் படைத்தவனே செயலாற்றும் சக்தி படைத்தவன். ஆண்மையும், அன்பும் கொண்டு பணியாற்றுங்கள்.
* பலமற்ற மூளையை முதலில் பலப்படுத்துங்கள். பலமுடைய மனிதனை ஞானம் பின்தொடர்ந்து வரும்.
* உள்ளுக்குள் இருக்கும் தெய்வத்தன்மையை வெளியே புலப்படுத்துங்கள். அதைச் சுற்றி ஒவ்வொன்றும் இசைவாக ஒழுங்குபடத் தொடங்கும்.
* உலகமே எதிர்த்து நின்றாலும் மனதில் பட்டதைத் துணிந்து செயல்படுத்துங்கள். குறிக்கோளைக் கைவிடாமல் இலக்கை நோக்கி முன்னேறுங்கள்.
-விவேகானந்தர்