ADDED : மார் 01, 2015 07:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தர்மம் இருக்குமிடத்தில் எல்லா நன்மையும் உண்டாகும்.
* புலன்களின் கவர்ச்சியால் அறிஞர்கள் கூட தடுமாற்றத்திற்கு ஆளாகிறார்கள்.
* கோபத்தை விட்டொழித்தால், வாழ்வில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
* புத்தியால் மனதை அடக்கியாள்பவன் வெற்றி இலக்கை எட்டுவது உறுதி.
* அறவழியில் பொருள் தேடி, நல்வழியில் செலவழிப்பதே சிறந்த வாழ்வு.
* கடவுளுக்கு படைத்த உணவை உண்பதால் மனத்தூய்மை ஏற்படும்.
-வியாசர்