ADDED : மே 26, 2023 01:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அதிகமாக சாப்பிட்டால் அறிவும், ஆரோக்கியமும் கெடும்.
* ஏழைகளின் கண்ணீர், கூரிய வாளுக்கு சமம்.
* பொறுமையாக இருங்கள். நல்லதே நடக்கும்.
* நேர்வழியைப் பின்பற்றுபவர்கள் எதற்கும் பயப்படவோ, துயரப்படவோ மாட்டார்கள்.
* கெட்டதை சொல்வதை விட மவுனமாக இருங்கள்.
* பெற்றோரை மதியுங்கள். அப்போதுதான் உங்கள் குழந்தைகள் உங்களை மதிக்கும்.
* கல்வி கற்பது ஒவ்வொருவரின் கடமை.
* போதும் என்ற மனமே உண்மையான செல்வம்.
* பிறர் மீது கருணை காட்டுங்கள்.
* எந்தவொரு சிறிய நன்மையையும் அலட்சியமாகக் கருதாதீர்கள்.
* கோபம், பசி, தாகம், இயற்கை உபாதை தொந்தரவுடன் இருக்கும்போது யாருக்கும் தீர்ப்பு வழங்க வேண்டாம்.
* மனிதர்களின் இயல்புகளை புரிந்து கொண்டால் துன்பம் இல்லை.
-பொன்மொழிகள்