ADDED : செப் 19, 2025 08:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அபூமஸ்வூத் என்பவர் தன்னிடம் வேலை பார்க்கும் ஒருவரை கோபத்தில் தாக்கினார். அப்போது அவருக்கு பின்புறத்தில், ''உம் பணியாளர் மீது உம்மை விட இறைவனுக்கே அதிக அதிகாரம் உண்டு'' எனக் குரல் கேட்டது.
திரும்பி பார்த்த போது நபிகள் நாயகம் நிற்பதைக் கண்டார். தண்டிக்கும் அளவுக்கு பணியாளர் தவறு செய்தாலும் அதற்குரிய தண்டனையை அவனே கொடுக்க வேண்டும். அதை மீறும் அதிகாரம் உமக்கு இல்லை என அறிவுறுத்தினார். உடனடியாக பணியாளரை விடுவித்தார் அபூமஸ்வூத். மேலும் அவரிடம், ''மரணத்திற்குப் பின் நீங்கள் செய்த குற்றங்கள் கணக்கிடப்படும். பணியாளரை விட உங்கள் மீது குற்றம் மிகுதியானால் அதற்குரிய தண்டனை கிடைக்கும்'' என்றார்.

