மனிதர்களே. இறுதித் தீர்ப்புக்காக நீங்கள் மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால் அறிந்து கொள்ளுங்கள். நாம் நிச்சயமாக உங்களை முதலில் மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்துளி, பின்பு ரத்தக்கட்டி, பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக்கட்டி என படிப்படியாக படைத்தோம்.
நாம் விரும்பியவாறு ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம். பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும் இதனிடையில் உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்.
அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப்போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டு வைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள். நீங்கள் தரிசாய்க் கிடக்கும் வறண்ட பூமியைப் பார்க்கிறீர்கள். அதன் மீது மழை நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது. இவ்வாறே இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கப்படுகிறது.